சர்வதேச நீரழிவு தினம் நவம்பர் 14,2025
யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை சமூகம், யாழ் நீரழிவு சங்கம் மற்றும் யாழ் மருத்துவ சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று ஐந்து கிலோ மீட்டர் நீரிழிவு நடைபவனி நடைபெற்றது. இந்த நடைபாவணியில் வைத்திய நிபுணர்கள், வைத்தியர்கள் தாதிய மாணவர்கள், பேராசிரியர்கள் மற்றும் பெரியார்கள் என நூற்றுக்கு மேற்பட்டோர் கலந்தது சிறப்பித்தனர். …
1987 ம் ஆண்டு கடமையில் இருந்தவேளை உயிர் நீத்தவர்களுக்கு இன்று 38 ம் ஆண்டு நினைவஞ்சலி நடைபெற்றது.
1987 ம் ஆண்டு ஜப்பசி 21 மற்றும் 22ம் திகதிகளில் யாழ் போதனா வைத்தியசாலையில் கடமையில் இருந்தவேளை உயிர் நீத்த வைத்தியசாலை வைத்தியநிபுணர்கள் வைத்தியர்கள் மற்றும் உத்தியோகத்தர்களை நினைவுகூறும் முகமாக இன்று 38 ம் ஆண்டு நினைவஞ்சலி; வைத்தியசாலையில் அனுஸ்டிக்கப்பட்டது. இவ் நினைவஞ்வலி வைபவத்தில் வைத்தியசாலை வைத்திய நிபுணர்கள் வைத்தியர்கள் தாதியர்கள் உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் மற்றும் உயிர் நீத்த உத்தியோகத்தர்களின் உறவினர்கள் பலரும் கலந்து கொண்டு சுடர்ஏற்றி மலர்மாலை அணிவித்து மலர்அஞ்சலி செலுத்தினார்கள். மேலும் 1987ம் ஆண்டு உயிர்நீத்த சாரதி வை. சன்முகலிங்கம் அவர்களின் நினைவாக அவரது மனைவி செல்வன் ரா.சுகுமாரின் தாயாரிக்கு சக்கர நாற்காலி ஒன்றினை நன்கொடையக வழங்கினார். …
இன்று எமது வைத்தியசாலையின் 175 ஆண்டு நிறைவையொட்டி முத்திரை வெளியீடும் உப தபால் அலுவலகம் திறப்பும் விமரிசையாக நடைபெற்றது.
இன்று எமது வைத்தியசாலையின் 175 ஆண்டு நிறைவையொட்டி முத்திரை வெளியீடும் உப தபால் அலுவலகம் திறப்பும் விமரிசையாக நடைபெற்றது. இந்நிகழ்வில் தென்னிந்திய திருச்சபை முன்னாள் பேராயர் வணக்கத்துக்குரிய எஸ் ஜெபநேசன் அடிகளாரும் தெல்லிப்பளை ஸ்ரீதுர்க்கா தேவி தேவஸ்தான தலைவர் கலாநிதி ஆறு. திருமுருகன் அவர்களும் மற்றும் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறிதரன் சன்முகநாதன் ஸ்ரீபவானத்தராஜா, ஜெயசந்திரமூர்த்தி ரஜிவன் ஆகியவர்களும் யாழ் மாவட்ட அரச அதிபர் திரு ம.பிரதிபன் மற்றும் Deputy Postmaster General Operation ,Deputy Postmaster General Northern Province ,Director Philatelic Bureau, Publicity Officer Philatelic Bureau Sri Lanka Post ,Divisional Superintendent Postal Department இவர்களுடன் வைத்தியநிபுணர்கள் வைத்தியர்கள் தாதியர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் நலன் விரும்பிகள் பலரும் கலந்து சிறப்பித்தார்கள் …
நேற்று உலக மருந்தாளர் தினம் கொண்டாடப்பட்டது.
உலக மருந்தாளர் தினத்தை முன்னிட்டு, விழிப்புணர்வு நடைபயணம், வைத்தியசாலை சுகாதார ஊழியர்களுக்கிடையே மென்பந்து கிரிக்கெட் போட்டி மற்றும் பரிசளிப்பு விழாவும் நடைபெற்றது. உலக மருந்தாளர் தினம் என்பது மருந்தாளர்கள் சுகாதாரத்தில் வகிக்கும் முக்கியத்துவத்தைக் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்குடன் சர்வதேச மருந்தாளர் சம்மேளனம் (International Pharmaceutical Federation – FIP) 2010ஆம் ஆண்டு முதல் கடைபிடிக்கப்படும் ஒரு சிறப்பு நாள் ஆகும். இந்த நாளில்: மருந்தாளர்கள் செய்யும் சேவைகளை பாராட்டுதல் மருந்து வழங்கலில் அவர்களின் உண்மையான பங்களிப்பை எடுத்துக் கூறுதல் மக்கள் நலன் மற்றும் சுகாதார மேம்பாட்டில் மருந்தாளர்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை வலியுறுத்துதல் என்ற நோக்கங்களுடன் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இலங்கையின் பல்வேறு வைத்தியசாலைகளில் மருந்தாளர்களின் பற்றாக்குறை காணப்படுகின்றது. அதுபோன்ற சூழ்நிலைகளிலும் வைத்தியசாலைக்கு வரும் ஒவ்வொரு நோயாளிக்கும் அர்ப்பணிப்போடும், கடமை உணர்வோடும் சேவை புரிந்து வரும் அனைத்து மருந்தாளர்களுக்கும் வாழ்த்துகள் மற்றும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். …